Friday, October 17, 2008

அன்புள்ள அம்மா!

பொய்யச் சொல்லி சேர்த்த,
மெய்யின்னுதான் இங்கிருக்கேன்
என்னைப்போல
அம்மா
எல்லாருக்கும் தூரத்துல இருக்காம்!

எனக்கு சட்டை தைக்க
அம்மா நீ
எத்தனை பாத்திரம் தேய்க்கணும்?
உன் கைகள் போல
என் ஆடையும் தேய்ந்து போச்சு...

வயசுக்கு மீறிய வளர்ச்சின்னு
தெருவோர வாலிபம் கிளர்ச்சியடையுது
என் வறுமை வாயிலில் கண் நுழைத்து!

நீ என்னை இங்கு
விட்டபோது வாங்கித் தந்த
மிட்டாய்
எறும்பு தின்னுப் போச்சு!
என் மகிழ்ச்சி இங்கே
எப்பவோ தொலைஞ்சு போச்சு!

நல்லா படிக்கிறேன்னு வாத்தியார்
தினமும் மிட்டாய் தர்றார்!
அத வாங்கித் தின்னும் எனக்கு
வாந்தி மயக்கம் வேற!

எப்படியிருந்தாலும் அம்மா
நான் உன்ன காட்டிக் கொடுக்க மாட்டேன்
அடுத்த முறையாவது நீ
அம்மாவாக வாம்மா!
என்ன கூட்டிக்கிட்டு போம்மா!!

0 மறுமொழிகள்