Monday, June 2, 2008

சில கேள்விகள்

சில கேள்விகளுக்குப் பதில் சொல்வது கடினம். நீங்களும் முயலுங்களேன். உங்களை நீங்களே விசாரிப்பதாக இருக்கட்டும்.

1. நீங்கள் நினைத்தது நிறைவேறி இருக்குதா?
1a. ஆம் என்றால் நிறைவேறியது எதனால்? கடின உழைப்பா? அதிர்ஷ்டமா?
1b. இல்லை என்றால் இன்னமும் முயலுகிறிர்களா?

1b.1. ஆம் என்றால் நேர் வழியா? குறுக்கு வழியா?
1b.2. இல்லை என்றால் நமக்கு திறமையில்லை என்று நினைக்கிறீர்களா அல்லது கெட்ட நேரம் என்று விட்டு விட்டீர்களா?

இன்னமும் கேட்கலாம். நம்மையே நாம் கேட்பது எளிது, ஏனென்றால் பதில் சொல்ல வேண்டியதில்லை.

0 மறுமொழிகள்